– தமிழ்
கவிஞர்: மகேந்திரன்.க
📚 ₹750 மதிப்புள்ள புத்தகங்கள் பரிசு
கவிதை
அகரமுதலாய் அமைந்தவளே – எம்
ஆதித் தாயாய் நிலைத்தவளே!
சங்கப் பலகை ஏறியவளே – உயர்
சந்தத் தமிழாய் மலர்ந்தவளே!
குமரிக் கடலின் அலை ஓசை – உன்
கொஞ்சும் தமிழின் உயிர் ஓசை!
இமயம் வரைக்கும் புகழ் மணக்க – நீ
இலக்கிய வானில் ஒளி கொடுக்க!
வள்ளுவன் தந்த திருக்குறளே – உன்
வாழ்வியல் சொல்லும் மணிமகுடம்!
கம்பன் வடித்த காவியமே – உன்
கற்பனை ஊற்றின் பெரும் வடிவம்!
பாரதி கண்ட புதுமையே – உன்
பாய்ச்சல் காட்டும் பெருமையே!
பாவேந்தர் பாடிய அழகே – நீ
பண்பாடு காக்கும் எம் விழியே!
எளியோர் பேசும் தேன் மொழியே
அறிவியல் ஆளும் வான் மொழியே!
கணினித் திரையில் நீ மின்ன – எம்
காதல் தமிழ் அங்கே மின்ன!
பிறமொழி மோகம் துறப்போமே
பெருமைத் தமிழைப் பேணுவோமே!
இனம் காக்க மொழி காப்போம் – நாம்
இணையிலாத தமிழைப் போற்றுவோமே!
வாழ்க தமிழ்! வளர்க அதன் புகழ்!
வையகம் உள்ளவரை நிலைக்க உன் புகழ்!
கார்புகழ் போற்றி நிற்கும் அவையரசி.